
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் நடத்தும் அனைத்து பரீட்சைகளுக்கும் விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, 2026 டிசம்பரில் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கு முன்னதாகவே பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் தங்களது தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வது அவசியமான பொறுப்பாகும் என பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.







