ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தின கூட்டம் இன்றைய தினம் இணுவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்தே இந்த மே தின கூட்டம் நடாத்தப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினரான ப.கஜதீபன், ஜனநாயக போராளிகள் கட்சியை சேர்ந்த வேந்தன், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் உட்பட அரங்கு நிறைந்த மக்கள் கலந்து கொண்டனர்.









