யாழில் தமிழ்க்கட்சிகளிடையே விசேட சந்திப்பு!

இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெற்றது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானத்தின் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பில் சி.வீ.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார், நாகலிங்கம் இரட்ணலிங்கம், சி.வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Share this article